சிவன் புகைப்படம் முன் ராஜநாத் சிங் பொய்!  நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


நிதிஉதவி வழங்கியதாக சிவன் புகைப்படம் முன் பொய் கூறிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் நாட்டு மக்களிடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னி வீரர் அஜய் சிங்கிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை உண்மை நிலையை கூறும் வீடியோ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதலைப் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னி வீரருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் பொய் சொல்லி உள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன் ராஜநாத் சிங் பொய் பேசி உள்ளார். ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தை ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தி உள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh should apologize to the people of the country Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->