உயிருடன் இருந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்..' நான் இன்னும் சாகல..' என்று தானே வந்து கூறிய நபர்..!! தெலுங்கானாவில் பரபரப்பு..!
Relatives Did Funeral to The Alive Person Thinking He Die
தெலுங்கானா மாநிலத்தின் பஷீராபாத் அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர் எல்லப்பா. 45 வயதாகும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளிய சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் விகாராபாத் ரெயில்வே போலீசார் எல்லப்பாவின் வீட்டிற்கு அழைத்து அவர் ரயிலில் சிக்கி இறந்து விட்டதாகவும், அங்குள்ள மருத்துவமனை பிணவறையில் அவரது உடல் இருப்பதாகவும், மேலும் அவரது செல்போன் அவரது சடலத்தின் அருகே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த எல்லப்பாவின் குடும்பத்தினர் மருத்துவமனை பிணவறை சென்று பார்த்த போது, அங்கிருந்த சடலம் முகம் சிதைந்த நிலையில் இருந்ததால், அது எல்லப்பா தான் என்று குடும்பத்தினர் முடிவு செய்து, அந்த சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
இதனிடையே உறவினர் ஒருவர் எல்லப்பாவை வழியில் சந்தித்துள்ளார். மேலும் அவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் விஷயத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எல்லப்பா, உடனடியாக தனது வீட்டிற்கு போன் செய்து தான் உயிரோடிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எல்லப்பாவின் உறவினர்கள் வீட்டில் வைத்திருந்த சடலத்தை ரயில்வே போலீசாரிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டனர். இதனிடையே எல்லப்பாவும் காவல் நிலையம் சென்று, தான் இறக்கவில்லை என்றும், தனது மொபைலை யாரோ திருடி விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ரயிலில் அடிபட்டு இறந்தவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Relatives Did Funeral to The Alive Person Thinking He Die