உத்தரபிரதேசத்தில் பயங்கரம்.! கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சூட்டு பணம், நகை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் தாமேரா அட்டாவில் ராகுல் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அவரது கடைக்கு துப்பாக்கியுடன் வந்த இருவர், கடையில் இருந்த அவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளனர். 

பின்பு பணம் மற்றும் தங்கத்துடன் தப்பிச் சென்ற போது, அதை பார்த்து பெண்கள் அலறியதால் அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள் நகையை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து நகைக்கடையில், உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி காட்சிகள் வெளியான நிலையில், அதில் உள்ள அடையாளங்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Robbers shot shop owner and escape with gold money in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->