5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

பலத்த காற்றும் வீசி வருவதால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதைத் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று இரவு 11.30 மணி வரை கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது ராட்சத அலைகள் வீசக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், காசர்கோடு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school holidays to 5 districts in kerala due to rain


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->