பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல்...மாணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் அப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, பள்ளியில் இருந்து போலீசாருக்கு புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், கணித தேர்வை ரத்து செய்வதற்காக மாணவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த மிரட்டலுக்கு ஆதாரமாக, மாணவன் அவனது தந்தையின் கைபேசியில் இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அமிர்தசரஸ் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். 

இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் அப்பகுதியில் பீதியையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த 7-ம் தேதி நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக புகார் வந்தது. பின்னர் அது மூன்று மாணவர்களின் கூட்டு முயற்சி செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் நள்ளிரவில் சோதனைகள் மேற்கொண்டன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student bomb threat school nera amirtasaras


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->