ரத்தம் சொட்ட சொட்ட பெண் நாய் கற்பழிப்பு.! வாயில்லா ஜீவனை கொடூர நிலைக்கு தள்ளிய கேவலவாதி.!
shameful news dog raped by some one in mumbai
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் மும்பையில் இருக்கும் ஓம் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடைய நிர்வாகி பிரிஜ் பானுஷாலிக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் முலுண்ட் (மேற்கு) நகரில் இருக்கும் ஒரு கார் பார்க்கிங் பகுதியில் ஒரு வெள்ளை நிற பெண் நாய், அங்கிருக்கின்ற தொழிலாளி ஒருவரால் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ந்து போன அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் உடனே சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார். அப்பொழுது அந்த இடத்தில் வாய் வீங்கி, ரத்தம் கொட்டிய நிலையில் ஒருபெண் நாய் வலியில் முனகியபடி இருப்பதை கண்டுள்ளார்.
உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக பரேலில் இருக்கின்ற ஒரு விலங்கு மருத்துவமனைக்கு அந்த நாயை கொண்டு சென்றுள்ளார். அந்த நாயை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அந்த நாய் மிக கடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்ச்சியடைந்து இருக்கின்றனர்,
பின் விலங்குகள் நல அமைப்பிற்கு புகாரளிக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் அந்த நாயை இப்படி வன்புணர்வு செய்த தொழிலாளி ஷோபநாத் சரோஜ்ஜை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் .காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை விலங்குகள் வன் கொடுமை வக்கீல் கைது செய்துள்ளனர்.
English Summary
shameful news dog raped by some one in mumbai