8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள், குழந்தைகள் காப்பகத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர்.

உடனே மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு நல அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த டேவிட் மைக்கேல் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர். 

இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் மைக்கேல் கன்னியாகுமரி பகுதியில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். பள்ளி மனைவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school teacher arrested for harassment in thenkasi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->