சித்தராமையா மனு - கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்  போது மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய அவுட்டில் முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது. தன்னுடைய 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி நாகபிரசன்னா முன் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் சித்தராமையா மற்றும் கவர்னர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டுள்ள நிலையில், இன்றைய தினம் சித்தராமையா வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, மீண்டும் சில வாதங்களை எடுத்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah Petition Final hearing today in Karnataka High Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->