டெல்லியில் நிலைமை மிக மோசம்!...சாலையில் தண்ணீர் தெளித்து நடவடிக்கை!...என்ன நடக்கிறது?... - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த 3 நாட்களாக காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 406 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்றும் காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் புகை மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், காற்று மாசை குறைப்பதற்காக  சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

காற்று தரக் குறியீட்டில்  0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும்,  51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும்.

இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும்,  201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும்  401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Situation in delhi is very bad sprinkling water on the road what is going on


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->