முன்னாள் உள்துறை அமைச்சர் மீது கல்வீச்சு - போலீஸார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டதில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

அதன் படி அவர் இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்து கொண்டிருந்த போது, அனில் தேஷ்முக்கின் காரின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அனில் தேஷ்முக்கின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. 

இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே இந்தச் சம்பவ குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணவும் முயற்சி செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stone attack to ex minister anil deshmukh in maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->