உ.பி: துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்.! தலையில் குண்டு பாய்ந்து தலைமை காவலர் பலி.!
The head constable was killed when a bullet hit his head while cleaning the gun in uttar pradesh
உத்திரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்த போது தலையில் குண்டு பாய்ந்து தலைமை காவலர் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தவர் தலைமைக் காவலர்(head constable) சந்தீப் யாதவ். இவர் நேற்று முன்தினம் மசௌலி காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் தனது வீட்டில் இருந்த தனது கை துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சந்திப் யாதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சந்தீப் யாதவ் சனிக்கிழமை பணியில் சேர திட்டமிடப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
The head constable was killed when a bullet hit his head while cleaning the gun in uttar pradesh