கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த நபர்! - Seithipunal
Seithipunal


மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர். மகாராஷ்டிராவில் வினோத சம்பவ நடந்துள்ளது.

தனது ஊரின் பஞ்சாயத்து தலைவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்தார் முகேஷ் பிரஜாபதி.

இவர் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முகேஷ் பிரஜாபதி தனது கிராம பஞ்சாயத்து தலைவரான கன்கரியா என்பவர் மீது பல உள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து பஞ்சாயத்து தலைவர் கன்கரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விரக்தியில் முகேஷ் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு இதுவரை அவர் கொடுத்த மனுக்களையும், பஞ்சாயத்து தலைவர் செய்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் சிலவற்றையும் மாலையாக அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்தார். 

மனுக்களை எல்லாம் மாலையாக அணிந்து உருண்டு வந்த முகேஷால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சமாதானப்படுத்தி முகேஷ் பிரஜாபதியை  அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The person wearing petitions to the collector's office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->