இடி மின்னலுடன் கனமழை! வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தூக்கத்திலே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


மங்களூர் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மங்களூரு அருகே உள்ள மாதாணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் யாசீர். இவர் மங்களூர் துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மரியம்மா. இவர்களது மகள்கள் ரெஜினா,ரிபான்,ரியானா இவர்களின் ரிஜானாவுக்கு திருமணம் முடிந்து தனது கணவருடன் கேரளாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாசீர் அவரது மனைவி மரியம்மா மற்றும் மகள்களான ரிபான் மற்றும் ரியானா ஆகியோருடன் இரவு உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அந்த சமயத்தில் பக்கத்து பக்கத்தில் வசிக்கும் அபூபக்கர் என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து யாசீர் வீட்டின் மீது விழுந்தது. அத்துடன் அங்கிருந்த இரண்டு பாக்கு  மரங்களும் சாய்ந்து யாசீர் வீட்டு மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் யாசீரின்  வீடு இடிந்து தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீதும் வீட்டின் சுவர் விழுந்துள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் தூக்கத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wall of the house collapsed and 4 people of the same family died in their sleep


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->