அட கடவுளே! கேரளாவில் மேலும் 460 நிலச்சரிவு அபாயம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாக்கி நாடு முழுவதும் அப்புறம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர்.

கேரளா மாநிலம் வயநாடு நிலசரிவில் சிக்கி உரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலி மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. நிலசரிவில் சிக்கியவர்களை தொடர்ந்து இரவு பகல் பாராமல் மீட்பு குழு மீட்டு வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது.

நிலச்சரிவு சம்பந்தமாக கேரளா மீன்வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சமூகம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வின் அடிப்படையில் 32 இடங்களில் 30 சதவீதத்துக்கு அதிகமாகவும் 76 இடங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகும் நிலசரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வயநாடு  தொண்டர் நாடு பொழுதானா, திருநெல்லி, , முப்பை நாடு பதீஜா தரா உள்ளிட்ட பகுதிகளின் நிலச்சரிவு அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

கொக்கையார், மறையூர் உட்பட 20 இடங்களில் மலப்புரத்தில் அமரம்பாலும் கருளை சூக்காடு நிலசரிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is a risk of landslides in 460 other areas in the state of Kerala not only in Wayanad


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->