மகாராஜா பட பாணியில் திருட சென்று வீட்டில் பக்கோடா செய்து சாப்பிட்ட திருடர்கள்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் திருட சென்று வீட்டில் திருடர்கள் பக்கோடா செய்து சாப்பிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் புகுந்து திருட்டு கும்பல் லட்சக்கணக்கில் மதிப்புடைய நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஒரு வீட்டில் திருடச் சென்ற கும்பல் அந்த வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்று பக்கோடா செய்து சாப்பிட்டுவிட்டு சிகரெட் பிடித்து விட்டு கழிவறையை பயன்படுத்திவிட்டு பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதே பகுதியில் 6 முதல் 7ன் வீடுகளில் ஒரே மாதிரியான முறையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.  இந்த திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருட்டு கும்பலை பிடிப்பதற்காக காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக கும்பலை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thieves went to steal and ate baguette at home in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->