இந்தியாவுக்குள் நுழைந்த மூன்று பாகிஸ்தானிய மீனவர்கள் கைது.!
three pakishthan fishermans arret in gujarat
பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது கண்டறியப்பட்டு, தடுக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களின் வழியே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கடல் பகுதியில் பாகிஸ்தானிய மீனவர்கள் அத்துமீறி நுழைவதும் தற்போது நடந்து வருகிறது.
இதனால், எல்லை பாதுகாப்பு படையினர் குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹராமி நல்லா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய மீனவர்கள் மூன்று பேரை எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தது.
அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் இருந்து படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
three pakishthan fishermans arret in gujarat