ஒருமாதக் குழந்தையை விற்பனை செய்த இளம்பெண் - மருத்துவர் உள்பட 3 பேர் கைது.!
three peoples arrested for baby sales in telangana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, மேட்சல் மாவட்டம், கொடூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். 30 வயதான இவருக்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இல்லாததால், இளம்பெண் குழந்தையை விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து, அந்த இளம்பெண் பீர்ஜாதி குடா மாநகராட்சி உட்பட்ட ராமகிருஷ்ண நகரில் சோபா ராணி என்ற ஓமியோபதி மருத்துவரை அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு மருத்துவர் அந்த இளம் பெண்ணிடம் ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் நேற்று காலை தன்னுடைய பெண் குழந்தையை மருத்துவர் சோபா ராணி இடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தன்னார்வளர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவர் சோபா ராணி குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
three peoples arrested for baby sales in telangana