மத்தியபிரதேசத்தில் பரிதாபமாக பறிபோன 4 உயிர்!....பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசத்தில், எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மத்தியபிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் குகாஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் சிலர், டிராக்டர் மூலம் ஜடாசங்கர் நகருக்கு சென்று கொண்டிருந்துள்ளனர். தொடர்ந்து அதிகாலை நேரத்தில்  பதேபூர் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.  இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் பதேபூர்  அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டுநரின் கட்டுபாடின்றி டிராக்டர் சென்றதா அல்லது அதிவேகமாக சென்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragically lost 4 lives in Madhya Pradesh Tractor overturned in a ditch accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->