ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல பயணிகள் அச்சம்; 90 வீதம் முன்பதிவுகள் ரத்து..!
Travelers cancel bookings for Jammu and Kashmir tour due to fear
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் சுற்றுலா பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம் ஜம்முகாஷ்மீரில் சுற்றுலாத் துறையை பெரிதும் பாதித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதற்காக பயணிகள் முன்பே திட்டமிட்டு, அதற்கான பயண ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் அதை ரத்து செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, குல்மார்க், ஹஜன் பள்ளத்தாக்கு, துலிப் கார்டன்ஸ் பகுதிகளுக்கான முன்பதிவை பயணிகள் ரத்து செய்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் அச்சம் காரணமாக பயணிகள் பயணத்திட்டத்தை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். இதுகுறித்து டில்லி கன்னட் ப்ளேசில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளதாவது;
'எங்களுக்கு ஒருசில குடும்பங்களில் இருந்து மட்டுமே டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. பஸ், விமானம் போன்றவற்றில் பயணம் செய்ய முன்பே ஏராளமானோர் டிக்கெட் புக் செய்வது வழக்கம். ஆனால், இப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், அதை ரத்து செய்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Travelers cancel bookings for Jammu and Kashmir tour due to fear