காங்கிரஸ் எம்.பி. மீது கொடூர தாக்குதல்!
Assam Congress MP Attacked
அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட தாக்குதல், மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார வேலைகளை முடித்துவிட்டு நேற்று மாலை பிரத்யுத் போர்டோலோய் இருவர் உடனும் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாதவர்கள் திடீரென வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் அவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினாலும், வாகனம் கடுமையாக சேதமடைந்தது.
சம்பவத்துக்குப் பிறகு, போர்டோலோய் மற்றும் அவரது குழுவினர் அருகிலுள்ள சுகாதார மையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என பிரத்யுத் போர்டோலோய் குற்றம் சாட்டினார். "இந்த முயற்சி எங்களை அச்சுறுத்த முடியாது; நாங்கள் எப்போதும் போராடுவோம்," என அவர் வலியுறுத்தினார்.
இவ்வருடத்தில் அசாமில் காங்கிரஸ் எம்.பி. மீது நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன், பிப்ரவரியில், துப்ரி எம்.பி. ரகிபுல் உசேன், அதே நாகோன் பகுதியில் தாக்குதல் சம்பவத்துக்கு உள்ளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Assam Congress MP Attacked