அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திர்ணாமுல் காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களை பைத்தியத்தில் அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது மம்தா பானர்ஜியின்  திரிணாமுல் காங்கிரஸ்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது. இதர மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 17 இடங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களில் 11 பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 பெண் வேட்பாளர்கள் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். அதில் சுஜாதா மண்டல் என்ற பெண் வேட்பாளர் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பெண் எம் பி களை கொண்ட கட்சி என்ற பெருமையை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamool Congress party most women MPs


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->