பள்ளி மாணவிக்கு திருமண ஆசை காட்டி கர்பமாக்கிய வாலிபர்.! 20 ஆண்டு சிறை தண்டனை.!
twenty years jail penalty to youth for sexual harassment case in maharastra
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே ஜல்னா பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி மாணவி ஒருவரிடம் நட்பாக பழகி வந்தார். நாளைடைவில் இந்த நட்பு நெருக்கமாகி யோகேஷ் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இது தொடர்பாக யோகேசிடம் தெரிவித்துள்ள அந்த சிறுமி தன்னை திருமண செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.ஆனால் யோகேஷ் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால், மன உடைந்த சிறுமி சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுது புலம்பியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் யோகேஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேசை கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த சம்பவம் தொடர்பாக போலீசில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். அந்த நிலையில், இந்த வழக்கில் ஒன்பது சாட்சிகளிடம் விசாரணை நடத்தபட்டது. அதில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, குற்றவாளியான யோகேசுக்கு இருபது ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twenty years jail penalty to youth for sexual harassment case in maharastra