சொதப்பிய கூகுள் மேப் - இருவர் பலி - 3 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சொதப்பிய கூகுள் மேப் - இருவர் பலி - 3 பேர் படுகாயம்.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் அத்வைது, அஜ்மல்  மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என்று மொத்தம் ஐந்து பேரும் காரில் கொச்சியில் உள்ள நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளனர். 

அங்கு விழாவை முடித்துவிட்டு அனைவரும் எர்ணாகுளத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, எர்ணாகுளம் பகுதியில் பலத்த கனமழை காரணமாக சாலை சரியாக தெரியாததால் அவர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி வாகனத்தை இயக்கி வந்தனர். 

அதன் படி இவர்கள் கொடூங்காடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வழி தெரியாமல் கார் ஆற்றில் கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பின்பகுதியில் இருந்த மூன்று பேரை பத்திரமாக மீட்டனர். முன்பகுதியில் கார் கதவு முழுமையாக மூடி இருந்ததால் முன் வரிசையில் அமர்ந்து இருந்த மருத்துவர்கள் அத்வைது மற்றும் அஜ்மல் உள்ளிட்ட இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த மூன்று பேரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கேரளாவில் கூகுள் மேப்பை நம்பி வாகனத்தை இயக்கியவர்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died and three peoples injured for accident in kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->