மணப்பெண்ணின் தாயும், மணமகனின் தந்தையும் ஓட்டம்! கள்ளக்காதலில் இது வேற ரகம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் மணப்பெண்ணின் தாயாருடன், மணமகனின் தந்தை ஓடிப்போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 

பொதுவாக திருமணம் என்றாலே சில கலாட்டாக்கள், சுவாரசிய சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் திருமணங்கள் சற்று விசித்தரமாகவும், சில சமயம் கொடூரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால செய்திகள் உணர்த்தி வருகின்றன. 

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணின் தாயும், மணமகனின் தந்தையும் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கஸ்கஞ்ச் கிராமத்து தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின் படி, கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஜூன் மாதம் மூன்றாம் தேதியே மணப்பெண்ணின் தாயாருடன், மணமகன் என் தந்தை வீட்டை விட்டு ஓடி உள்ளார். 

பின்னணியில் உள்ள விஷயம் என்னவென்றால், இருவரும் கடந்த 28 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு தொடர்ந்து வந்த நிலையில், இருவரும் சம்பதிகளாக மாற முடிவு செய்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். 

இதில் ஓடிப்போன மணப்பெண்ணின் தாய்க்கு 35 வயது தான் ஆகிறது. அப்போது என்றால் மணமகளுக்கு என்ன வயது என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள். 

மேலும், ஓடிப்போன மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகள் உள்ளனர், மணப்பெண்ணின் தாய்க்கு ஆறு குழந்தைகள் உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஓடிப் போனவர்களை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Illegal affair and escape to home


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->