குழந்தைகளை ஆற்றில் முழ்கடித்து கொன்ற தாய்... விசாரணையில் பகீர் வாக்குமூலம்! உத்திர பிரதேசத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில் பசியால் அழுது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசம், அவுரையா மாவட்டத்தில் உள்ள பாராவுயா கிராமத்தில் பிரியங்கா என்ற பெண் தனது 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார். 

இந்நிலையில் 4 குழந்தைகளை பிரியங்கா கிராமத்தின் அருகே உள்ள நதிக்கு குளிக்க அழைத்துச் சென்று தனது 4 வயது குழந்தை, 5 வயது குழந்தை இருவரையும் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நான்கு குழந்தைகளின் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும் 1  குழந்தைகள் ஆற்றில் அருகே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதற்கிடையே போலீசார் பிரியங்காவை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுகிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசாரணையில் பிரியங்கா, தனது குழந்தைகள் தொடர்ச்சியாக பசியால் அழுவதை கண்டு மனம் பொறுக்காமல் அவர்கள் படும் கஷ்டத்தை போக்க அவர்களை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh mother killed her children drowning river


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->