சோகத்தில் மேற்கு வங்காளம்!...150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவை!...மாநில அரசு அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1873-ம் ஆண்டு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் குதிரைகளைக் கொண்டு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்படும் டிராம்கள் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இவை பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற மாநிலத்தின் பிற நகரங்களில் டிராம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டில் குளிர்சாதன வசதி கொண்ட டிராம்கள் அறிமுகப்படுத்தப்பட்ட

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்நேகாசிஸ் சக்ரபோர்த்தி கூறுகையில், டிராம்கள் சாலைகளில்  மெதுவாக  செல்வதன் காரணமாக சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக எஸ்பிளனேட்-மைதான வழித்தடத்தில் இயங்கும் டிராம் சேவையை தவிர, மற்ற அனைத்து வழித்தடங்களில் இயங்கி வரும் ராம் சேவைகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

சுமார் 150 ஆண்டுகளாக கொல்கத்தாவில் மட்டும் டிராம் சேவை தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், தற்போது அவை முடிவுக்கு வர இருப்பது அம்மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West bengal in tragedy tram service that has been running for 150 years state government action


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->