தெலுங்கானா | கறிக்குழம்பு வைக்காத மனைவி இரத்த வெள்ளத்தில் மரணம்! கணவன் மாயம்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா: மஞ்சரியாலா மாவட்டத்தில் உள்ள சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டையை சேர்ந்தவர் போஷம். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 

போஷம் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்து, அவரது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றார். 

பின்னர் போஷம் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்து சாப்பிடுவதற்காக சாப்பாடு மற்றும் கோழி கறி குழம்பு கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பு ஊற்றினார். 

இதனை பார்த்து ஆத்திரமடைந்த போஷம் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, போஷம் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டியுள்ளார். 

இதனால் சங்கரம்மா தலை இரண்டாக பிளந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மனைவி இறந்ததை உறுதி செய்த பிறகு போஷம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

நேற்று காலை வெகு நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து சென்னூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சங்கரம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife died flood blood Husband escaped


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->