உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்த பெண் ஊழியர் - நொடி பொழுதில் நடந்த கொடூரம்.!
woman employee death in gym at banglore
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தாவணகெரேவை சேர்ந்த மல்லன் கவுடா மற்றும் ஜோதி தம்பதியின் மகள் சராவணி என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்கிடையே சராவணிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால், சராவணி கடந்த 2 நாட்களாக மனமுடைந்த நிலையில், காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் சராவணி வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு அலுவலக பணியில் ஈடுபட்டபோது, திடீரென சராவணி வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சராவணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகலகுண்டே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman employee death in gym at banglore