புதிய சுவையில் காராமணி வேர்க்கடலை பொரியல் .! - Seithipunal
Seithipunal


பச்சை காராமணியில் பொடி செய்து போட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும். அதனை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வரமல்லி 
வெந்தயம் 
உளுந்து 
கடலை பருப்பு 
சீரகம்
வர மிளகாய் 
வேர்க்கடலை
எண்ணெய் 
கடுகு 
உளுந்து 
சீரகம்
சின்ன வெங்காயம் 
கறிவேப்பிலை 
காராமணி 
மஞ்சள் தூள் 
பெருங்காயத் தூள்
உப்பு 
எள்ளு

செய்முறை

ஒரு கடாயில் வர மல்லி, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்து, வெந்தயம், சீரகம், வர மிளகாய், எள்ளு, வேர்க்கடலை என அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைத்து கொர கொரப்பாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின்னர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

இதில், காராமணியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
காய் நன்றாக வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மாசலாப்பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான காராமணி வேர்க்கடலை பொரியல் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make karamani verkadalai poriyal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->