சுட சுட கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


வேலைக்கு மற்றும் பள்ளிக்கு செல்பவர்களுக்கு தினமும் மதிய உணவாக என்ன செய்ய வேண்டும்? என்று யோசிப்பதே பெரும் வேலையாக உள்ளது. இதனால், அரை மணி நேரத்தில் சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
கேரட்
பீன்ஸ்
பச்சை பட்டாணி
பூண்டு
இஞ்சி
மஞ்சள் தூள்
துருவிய தேங்காய்
கிராம்பு
ஏலக்காய்
இலவங்கப்பட்டை
பிரியாணி இலை
நட்சத்திர சோம்பு
முந்திரிப் பருப்பு
வறுத்த வேர்க்கடலை
எலுமிச்சம்பழ சாறு
கொத்தமல்லி
புதினா
உப்பு
நெய்
எண்ணெய்
தண்ணீர்

செய்முறை:-

முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். இதையடுத்து அடுப்பில் ஒரு வானலை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பு, வேர்க்கடலைகளை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும்  துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, மற்றும் நட்சத்திர சோம்பை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கேரட், பீன்ஸ், மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு, மஞ்சள் தூள், உப்பு, மசாலா பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

இதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து கிளறியவுடன், வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make kothamalli satham


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->