சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி குருமா - வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


சப்பாத்தி, தோசை, இட்லி உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற பட்டாணி குருமா செய்வது எப்படி? என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

பட்டாணி
வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
தக்காளி
கடுகு
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம்
துருவிய தேங்காய்

செய்முறை:-

முதலில் பட்டாணியை ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் பட்டாணியை தக்காளியுடன் சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் விட வேண்டும். இதனை நன்கு கடைய வேண்டும். இதன் பிறகு மிக்சி ஜாரில், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

இதையடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். இதனுடன் வேகவைத்த பட்டாணி தக்காளி கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டாணி குருமா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make pattani kuruma


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->