தலைமுடி வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தலைமுடி வறண்டு போகாமல் இருக்க செய்ய வேண்டியவை:

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.பின் அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் நுனி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பின் ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.இந்த மாஸ்க் தலைமுடியில் விழும் சிக்கை போக்குவதோடு, தலைமுடி வறண்டு இருப்பதையும் தடுக்கும்.


தேங்காய் பால்:
தேங்காய் பாலில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. இது நல்ல கண்டிஷனராக இருப்பதோடு மட்டுமின்றி, தலைமுடிக்கான ஒரு நல்ல புரோட்டீன் சிகிச்சையாகவும் இருக்கும். அதோடு இது பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். பின் அதை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளியுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், தலைமுடிக்கு தேவையான சத்து கிடைத்து முடி நன்கு அடர்த்தியாக வளரும். முக்கியமாக தேங்காய் பாலை அதிகமாக சூடேற்றிவிட வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

prevent your hair from drying out


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->