நம் வாழ்வில் செய்ய கூடாதவை என்னென்ன ? - Seithipunal
Seithipunal


வீட்டில் நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்

* காலையில் எழுந்தவுடன் குளிக்கும் போது தண்ணீர் அங்கும் எங்கும் அலை மோதாமல் குளிக்க வேண்டும். அப்படி அலைமோதினால் அன்றைய நாள் நாமும் அங்கும் இங்குமாக அலைய வேண்டியது வரும்.

* இரவில் தூங்கும் போது தலைக்கு வைக்கும் தலையணையை காலில் வைத்து படுக்கக் கூடாது. தலையணை மீது ஏறி அமர்வது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

* பொதுவாக சாப்பிட உட்காரும்போது நிழல் நமக்கு முன் பக்கமாக விழும்படி உட்காரக் கூடாது. இதனால், வீட்டில் கஷ்டம் ஏற்படும். சாப்பிடும்போது ஐந்து விரல்களில் ஒரு விரலை நீட்டியும், சாப்பாடு கீழே விழும்படி கையை உதறியும் சாப்பிடுவது நல்லதல்ல.

*வாய் கொப்பளிக்கும் போது, எச்சில் துப்பும்போது வலது பக்கம் துப்ப கூடாது.
சோறு, உப்பு, நெய் போன்றவற்றை கையால் பரிமாறுவது கூடாது.

* வெங்காயம், இஞ்சி, கட்டி தயிர், பாகற்காய் போன்றவற்றை இரவில் உண்ணக்கூடாது.
இரு கைகளையும் சேர்த்து தண்ணீர் குடிக்க கூடாது. இப்படி மேலே உள்ள முறைகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு சகல நன்மைகளும் உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what dont do in life


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->