அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு.! பிரதமர் மோடி பங்கேற்பு.!!
42nd convocation of anna university
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் தொடர்புள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் பல விளையாட்டு போட்டிகளை குறிப்பதாகவே உள்ளது. தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையதாகும். அங்கு இறைவன் அரசியுடன் செஸ் விளையாடினார் என்பது ஐதீகம் என கூறினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் 69 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பிரதமர் வழங்க உள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி புறப்படுகிறார்.
English Summary
42nd convocation of anna university