வாரணாசி : சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - 6 வயது குழந்தை உட்பட 6 பேர் படுகாயம்..!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் விஜய் யாதவ் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தை உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள தஷாஷவ்மேத் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் யாதவ். இவர் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 

இந்த சம்பவத்தில் இவரது வீட்டில் இருந்த விஜய் யாதவின் குடும்ப உறுப்பினர்களான 6 வயதான நிர்பய் யாதவ், கிரண் யாதவ், உமேஷ் யாதவ், தினேஷ் யாதவ், மற்றும் கோலு (எ) சுபம் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து தஷாஷவ்மேத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள விஜய் யாதவ் இந்த தாக்குதல் தனது முழு குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கில் நடத்தப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அங்கித் யாதவ், ஷோபித் வர்மா, சாஹில் யாதவ், கோவிந்த் யாதவ் மற்றும் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தஷாஷவ்மேத் போலீசார், இவர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக தஷாஷவ்மேத்  காவல் நிலைய பொறுப்பாளர் ராகேஷ் பாலை சஸ்பெண்ட் செய்து வாரணாசி போலீஸ் கமிஷனர் மோஹித்  அகர்வால் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 Injured in Gunfire At Varanasi Samajwadi Leader House


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->