நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 94 வயது பாட்டி..எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 94 வயது மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டலம் பெசன்ட் நகர் 174 வது வார்டில் 94 வயது மூதாட்டி காமாட்சி என்பவர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், தமிழகத்திலேயே அதிக வயதுடைய வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் அந்த தொகுதியில் அதிக செல்வாக்குடன் இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

94 year old grandmother candidate in urban local election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->