ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : நீளும் பட்டியல்... மேலும் ஒரு அதிமுக பிரமுகர் இன்று கைது..!!! - Seithipunal
Seithipunal



பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு அதிமுக பிரமுகர் இன்று கைது செய்யப் பட்டுள்ளார். இவர் கடம்பத்தூர் பகுதி அதிமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் செம்பியம் போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் திருவள்ளூரைச் சேர்ந்த கடம்பத்தூர் பகுதி அதிமுக கவுன்சிலராக உள்ள ஹரிதரன் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

ஹரிதரன் மூலம் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் அருளின் செல்போன் உட்பட கொலையைத் திட்டமிட பயன்படுத்தப்பட்ட 5 செல்போன்கள் வெங்கத்தூரில் உள்ள கூவம் ஆற்றில் உடைத்து வீசப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களை வரவழைத்து ஒரு நாள் முழுக்க அந்த கூவம் ஆற்றில் மூழ்கி தேடி, உடைத்து வீசப்பட்ட செல்போன் பாகங்களைக் கண்டறிந்துள்ளனர். அதிமுக கவுன்சிலர் ஹரிதரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்ட அனைவருடனும் தொடர்புள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள பெண் தாதா அஞ்சலையின் புளியந்தோப்பு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 5 செல்போன்கள், பென் ட்ரைவ், லேப்டாப், வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Councilor Arrested in Armstrong Murder Case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->