திடீர் திருப்பம் - அதிமுக தலைமை விடுத்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் தோல்வி குறித்து, ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இதுவரை நடந்த இரு ஆலோசனை கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் வட மாவட்டங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியதாக தெரியவந்தது. 

மேலும் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், வருகின்ற 17ஆம் தேதி நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுகவின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில், நாடாளுமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைக் கூட்டங்கள் முதற்கட்டமாக கடந்த பத்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி வருகின்ற 17ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டம் எப்போது நடத்தப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK july17 meet cancel


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->