#BigBreaking | ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் ஒரே ஒரு வேட்பாளர், இரட்டை இல்லை சின்னம் உறுதி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழுவாய் எதிர்த்த ஓபிஎஸ்-ன் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,  இபிஎஸ் தரப்பில்இடைக்கால மனுவாக, "இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "ஈரோடு இடைத்தேர்தலில்  இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

* மேலும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை, சேர்த்து பொதுக்குழு கூட்ட வேண்டும்,
* பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,
* அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் பதிலில், நாங்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK OPS EPS SC case Order 2023 details


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->