திமுக அரசால் பரிதவிக்கும் 2 லட்சம் குடும்பங்கள்! எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நெசவாளர்களுக்கு உண்டான மானியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். 

நெசவாளர்கள் உற்பத்தி செய்த துணிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஓராண்டாக நெசவாளர்களுக்கான தள்ளுபடி மானிய தொகையை திமுக அரசு இதுவரை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எனவே, நெசவாளர்களுக்கான மானியத்தை வழங்கி, அவர்கள் தீபாவளி கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->