கோவாவில் பாஜக முன்னிலை.. நேர்மையான அரசியல் ஆரம்பம் -அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சட்டமன்ற தேர்தலில் இரு இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மீ கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்துக் கூறி நேர்மையான அரசியல் துவங்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். 

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இதில் இரு இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியிருக்கிறது. டெல்லி முதலமைச்சரும், ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இதுகுறித்து, "கோவாவில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 

வெற்றி வேட்பாளர்களான குரூஸ் மற்றும் கேப்டன் வின்ஸி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். கோவாவில் தற்போது நேர்மையான அரசியல் ஆரம்பித்துள்ளது." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aravind kejriwal about goa election results


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->