பாஜக 400 இடங்களில் வெல்லும் .. மோடி தான் மீண்டும் பிரதமர்.. எல். முருகன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருச்செந்தூர் முருகன் கோவிலில்  சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் இன்று காலை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடைபெற்று வரும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயமாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராவார். நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு சாதகமான நிலை தான் நிலவுகிறது.

தற்போது தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார். மேலும் இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். 

மேலும் 2014ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் நாம் 10வது இடத்தில் இருந்தோம். ஆனால் இப்போது 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.  இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 3வது இடத்திற்கு நாம் முன்னேறி விடுவோம். அதை பிரதமர் மோடி நிச்சயம் நடத்திக் காட்டுவார்" என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Will Win in 400 Places and Modi Will become PM Again L Murugan


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->