மத்திய அரசின் வரிப் பகிர்வு : 8 மாநிலங்களுக்கு தீயாய் பறந்த சித்தராமையாவின் அழைப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு  கர்நாடகா முதலமைச்சர்  சித்தராமையா கடிதம் மூலம்  அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில்,கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், குஜராத், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின்  முதலமைச்சர்களுக்கு மத்திய அரசின் நியாயமற்ற முறையில் வரிப் பகிர்வு குறித்து கடிதம் எழுதியுள்ளேன் என்றும், தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்கள், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்கள், அவற்றின் பொருளாதார செயல்திறனுக்காக அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் விகிதாச்சாரத்தில் குறைவான வரி ஒதுக்கீடுகளைப் பெறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நியாயமற்ற அணுகுமுறை கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, முற்போக்கான மாநிலங்களின் நிதி சுயாட்சியை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 


நிதி ஆயோக் ஒரு திசை மாற்றத்தை உருவாக்கி, வளர்ச்சி மற்றும் சிறந்த வரித் திரட்டலுக்கான ஊக்கங்களை உருவாக்க வேண்டிய தருணத்தில், நிதிக் கூட்டாட்சி பிரச்சினைகளை கூட்டாக விவாதிக்க பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டிற்கு  8 மாநில முதலமைச்சர்களை அழைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government tax distribution Siddaramaiah call to 8 states has gone viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->