#BigBreaking | எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்.! ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த 25 ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், சென்னையில் மட்டும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நிர்வாகத் திறனற்ற விடியா அரசாக உள்ளது திமுக அரசு என்றும், சிமெண்ட் ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் விலை பல மடங்கு உயர்ந்துக்கதவும், அதிமுக ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சுமார் ஒருமணி நேரம் கடும் வெயிலில் பேசிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அமர வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai admk eps protest info july


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->