#BigBreaking | ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம் - சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.!
chennai hc judge no change for admk ops eps case
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை நாட ஓ பன்னீர்செல்வத்திற்கு அறிவுறுத்தியது. அதில், பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு முடிவு எடுக்கும். எனவே, உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறு ஓ பன்னீர்செல்வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வர இருந்தது.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக்கோரி, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர் வைரமுத்து என்பவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளித்துனர்.
அந்த மனுவில், "ஏற்கனவே இந்த நீதிபதி வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக, கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ள கருத்து, இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கருத்து என்பதால், அவர் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதி, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai hc judge no change for admk ops eps case