ஊர்வலம் போலாமா..!! வேணாமா..!! பாஜகவினரின் வாய் சண்டை கைகலப்பாக மாறியது..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்ட சிதம்பரம் நகர மன்ற பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட சத்தியமூர்த்தி என்பவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்காக சிதம்பரம் நகர பாஜக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. பாஜகவினர் ஊர்வலமாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் தடையை மீறி ஊர்வலம் சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல வேண்டாம் என மறுத்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. 

இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் சிறிது பரபரப்பை உண்டாக்கியது. சிதம்பரம் பகுதியில் அடுத்தடுத்து இரு வேறு சம்பவங்களில் பாஜகவினரையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவம் கடலூர் மாவட்ட பாஜக தொண்டர்களை முணுமுணுக்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between Chidambaram city BJP volunteers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->