"தென் பெண்ணை பெருவெள்ளம்: ஸ்டாலின் நிகழ்த்திய பேரிடர்!" - Seithipunal
Seithipunal



தென் பெண்ணை ஏற்பட்ட பெருவெள்ளம், முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்திய பேரிடர் என்று, பாமகவை சேர்ந்த அருள் இரத்தினம் சில ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மத்திய நீர் ஆணையம் எச்சரித்த பின்னரும் சாத்தனூர் அணை நீரை திமுக அரசு குறைக்காமல் விட்டதே தென் பெண்ணை வெள்ளத்திற்கான முதல் காரணம் ஆகும். 

புயலுக்கு முன்பு நவம்பர் 29 அன்று 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. அதாவது, முழு கொள்ளளவு இருந்தது! நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களிலும் அதே 118 அடி அளவாகவே இருந்தது. 

அதாவது, பெருமழை பெய்வது உறுதியான பின்னரும் கூட, சாத்தனூர் அணை நீர் அளவை ஒருபோதும் குறைக்கவே இல்லை!

புயல் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்; அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29.11.2024 அன்றே மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) எச்சரித்த பின்னரும் ஸ்டாலின் அரசு அணையின் நீர் மட்டத்தை குறைக்கவே இல்லை! 

தென் பெண்ணை ஆற்றில் ஒரு பெருவெள்ள பேரிடர் நிகழ்வதற்கு காரணமான மு.க. ஸ்டாலின், இப்போது உயிரழப்புகளை தடுத்தோம் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது வெட்கக் கேடு! #சாத்தனூர்_சாத்தான்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Fengal Sathanur Dam DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->