தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி ஜந்தர் மந்தரில் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும், இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பும் இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று முதலே உத்தரபிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். 

இதனையடுத்து காவல்துறையினர் மீரட் சாலை, காஸிப்பூர் எல்லை மற்றும் சிங்கு எல்லை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டபடி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Farmers protest 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->