போராட்டத்துக்கு நாள் குறித்த தேமுதிக.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் 27-ம் தேதி ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை விடுத்துள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகின்ற (மே 27) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk protest announce may 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->