திடீர் பரபரப்பு.. திமுகவின் முக்கிய நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளஉடையானம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள். இவர் திமுக வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். 

இவரது  மகள் சோலைமணிக்கும், மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் செய்து வைத்தார். திருமணம் நடைபெற்ற சில நாட்களிலே கருத்து வேறுபாடு காரணமாக சோலைமணியை மூர்த்தி பிரிந்து சென்றுவிட்டார்.  இதற்கு மாமியார் ராக்கம்மாள் தான் காரணம் என நினைத்த மூர்த்தி நேற்று காலை அவரது வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார்.

அப்போது மூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் ராக்கம்மாளை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராக்கம்மாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

திமுக பெண் நிர்வாகி குடும்பப் பிரச்சினைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk member murder in tiruchuli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->